Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற திருப்பத்தூர் பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). இவர் நேற்று மாலை குடும்பத்துடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு செல்வதற்காக அத்தியந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த பஸ்சில் ஏறும்போது, அதில் இருந்து இறங்குவது போல் வந்த ஒரு வாலிபர், வெங்கடேசன் சட்டைப்பையில் இருந்த ரூ.ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.