/* */

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; 2 வாலிபர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; 2 வாலிபர்கள் உயிரிழப்பு
X

விபத்து ஏற்படுத்திய கார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வெளுங்கனந்தல் கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் மகன் தினேஷ் (வயது 26). சொர கொளத்தூர் பகுதியை சேர்ந்த ரேணு மகன் முத்துக்குமார் (37). இவர்கள் இருவரும் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி செடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்காக மதியம் ஒரே இருசக்கர வாகனத்தில் கீழ்பென்னாத்தூர் சென்றனர்.

அங்கு பூச்சிக் கொல்லி மருந்து வாங்கிவிட்ட இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அரசம்பட்டு அரச மரம் அருகே எதிரில் திருவண்ணாமலையில் இருந்து வேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் தினேசும், முத்துக்குமாரும் பலத்த காயம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கடம்பை கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் உஸ்மான் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 20 March 2022 12:17 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!