திருவண்ணாமலையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் நடைமுறைகள், கொரோனா விழிப்புணர்வு நடைமுறைகளை வாக்குச்சாவடிகளில் பின்பற்றுதல் உள்ளிட்டவைகள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஆரணி வாக்குப்பதிவு அலுவலர் முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 65 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 234 ஆண்கள் வாக்குப்பதிவு அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு ஆரணியில் நகராட்சி ஆணையாளர், தேர்தல் அதிகாரியுமான தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.