Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையார் கோயில் நவராத்திரி விழாவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன்
திருவண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 2ம் திருநாளான இன்று அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் 07.10.21 நவராத்திரி உற்சவம் இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்பு திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட தால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை துர்க்கை அம்மன் திருக்கோயில், ஸ்ரீசேஷாத்ரி ஆசிரமம், ரமண ஆசிரமம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், அகஸ்தியர் ஆசிரமம், காமாட்சி அம்மன் திருக்கோயில் ஆகிய இடங்களில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கியது.
நாளை வெள்ளிக் கிழமை, சனிகிழமை, ஞாயிறு ஆகிய மூன்று தினமும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.