Begin typing your search above and press return to search.
காந்தி ஜெயந்தி: நாளை டாஸ்மாக் விடுமுறை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காந்தி ஜெயந்தியையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் நாளை மூடி வைக்க வேண்டும்.
அதேபோல் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி என்பதால் அன்றைய தினமும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்வது தெரியவந்தால் மது கூடத்தின் உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமைகளை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட மது கூட உரிமைதாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.