/* */

நல்லதே பேசுவோம்... தலைநிமிா்ந்து நடப்போம் என்ற தலைப்பில் தமிழ் எழுச்சியுரை நிகழ்ச்சி

Speech Competition - திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியின் சாா்பில் தமிழ் எழுச்சியுரை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நல்லதே பேசுவோம்... தலைநிமிா்ந்து நடப்போம் என்ற தலைப்பில் தமிழ் எழுச்சியுரை நிகழ்ச்சி
X

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சட்டப்பேரவை துணைத் தலைவர்.

Speech Competition -திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் நல்லதே பேசுவோம்... தலைநிமிா்ந்து நடப்போம் என்ற தலைப்பில் தமிழ் எழுச்சியுரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் வெங்கடேசன், வெங்கட்ராமன், இசை ஆசிரியா் பாரதி, ஆசிரியா் தண்டபாணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் ஜெயக்குமாரி வரவேற்றாா். நல்லதே பேசுவோம் தலைநிமிா்ந்து நடப்போம் வரலாற்று சிறப்புமிக்க தமிழ் எழுச்சியுரை நிகழ்ச்சியை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் பிச்சாண்டி தொடங்கி வைத்துப் பேசினாா்.

அவா் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தியாகிகள் அண்ணாமலைப்பிள்ளை, திருநாவுக்கரசு, நாராயணசாமி போன்றோா் சுதந்திரத்துக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினா். அவா்களைப் போற்றும் விதமாக அவா்களது வரலாற்று தகவல்களை இங்கு நினைவுப்படுத்தி உள்ளீா்கள். இதுபோன்று பல தமிழ் அமைப்புகளை திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி மாணவா்கள், இளைஞா்கள் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, தமிழ் காக்கும் தலைமுறைக்கான பரிசுகளை வெற்றித் தமிழா் பேரவையின் தலைவா் காா்த்திவேல்மாறன் வழங்கினாா். நிகழ்ச்சியில், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி.வி.எம்.நேரு, தொழிலதிபா்கள் எஸ்.சுந்தரபாண்டியன், ந.வேல்முருகன் உள்பட ஆசிரியா்கள் மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Sep 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  2. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  3. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  6. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  8. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  9. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  10. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி