நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் தமிழில் நடிகை பூமிகா
நடிகை பூமிகா, நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழில் ஜெயம் ரவி படத்தில், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
HIGHLIGHTS
ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைநாயகிகளில் ஒருவர் நடிகை பூமிகா. விஜய்யுடன் 'பத்ரி' என்ற படத்தில் அறிமுகமானார் பூமிகா. அதன்பிறகு, 'ரோஜா கூட்டம்', 'சில்லுன்னு ஒரு காதல்' போன்ற படங்களில் நடித்த பூமிகா, தெலுங்கு, இந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பூமிகா, அதன்பிறகு தெலுங்கில் அவ்வப்போது நடித்தவர், தமிழில் பல ஆண்டுகளுக்கு பிறகு சமந்தா நடித்த 'யுடர்ன்' படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'சீதாராமன்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பூமிகா, தற்போது தமிழில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்தில், அவரது சகோதரியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு, தமிழில், ஜெயம் ரவி படத்தில் பூமிகா நடிப்பது, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.