Begin typing your search above and press return to search.
4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்
ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட வேண்டும் எனவும், பெட்ரோலுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்
திருவண்ணாமலை மாவட்ட பேருந்து நிலையத்திற்கு அருகே பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சத்யா முன்னிலை வகித்துள்ளார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட வேண்டும் எனவும், பெட்ரோலுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும் எனவும், பிளாட்பார கட்டணத்தை கைவிட வேண்டும் போன்ற 4 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர்.