/* */

சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
X

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 23ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, 24ம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, 23ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும், எனவே 40 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அப்போது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இணையாக, சுமார் 40 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்லும் வாய்ப்பு சித்ரா பவுர்ணமி நாட்களில் இருப்பதால் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்பி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

அப்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது:

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். நகரின் முக்கிய சாலைகளில் 14 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுகிறது. எனவே, தற்காலிக பஸ் நிலையங்களில் நிழற்பந்தல், குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்ய வேண்டும். மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 2,800 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை அருகே வருவதற்கு வசதியாக சுமார் 120 இணைப்பு பஸ்கள் இலவசமாக இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 85 இடங்களில் மருத்துவக் குழுக்கள், 15 இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணபைபு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்படம், மேலும், காவல் உதவி மையங்கள், காவல் கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகள், கார், வேன்களை நிறுத்த பார்க்கிங் வசதி என விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, கோயில் நிர்வாகமும், காவலத்துறையும் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், விரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், மோர், பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட உள்ளன. அன்னதானம் வழங்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டும். அன்னதான உணவின் தரத்தை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறையினர் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, ஏடிஎஸ்பி பழனி, கோயில் மேலாளர் செந்தில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர், அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 16 April 2024 1:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு