Begin typing your search above and press return to search.
மாணவிக்கு பாலியல் பலாத்காரம்: மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு
திருவண்ணாமலை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு
HIGHLIGHTS
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசு பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியை சக மாணவன் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவர், மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மாணவர், மாணவியை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவரை வலைவீசி தேடி வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு எழுதும் காலகட்டத்தில் மாணவன் தலைமறைவாக உள்ளதால் பிளஸ் டூ தேர்வு எழுதாமல் இருந்து வருகிறான்.