/* */

பேருந்தில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

Gutka - பேருந்தில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Gutka | Tiruvannamalai News
X

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Gutka -பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக பேருந்துகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை எடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் போலீசார் நகரின் எல்லைப் பகுதியில் உள்ள அத்தியந்தல் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த பேருந்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்த அய்யம்பாளையம் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்த முத்து மற்றும் திருவண்ணாமலை நகரம் ராமலிங்கனார் நகரை சேர்ந்த வடமலை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Sep 2022 10:47 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  4. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  5. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  8. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  9. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...