Begin typing your search above and press return to search.
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் காவல்துறைக்கு சானிட்டரி இயந்திரங்கள் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக்கு, 15 தானியங்கி சானிட்டரி இயந்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி நன்கொடையாக வழங்கியது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களின் பயன்பாட்டுக்காக, 15 தானியங்கி சானிட்டரி இயந்திரங்களை, பாரத ஸ்டேட் வங்கி நன்கொடையாக வழங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஜான்வெட் தலைமை வகித்தார்.
திருவண்ணாமலை நகர பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் சார்பில், காவலர்களின் பயன்பாட்டுக்காக 15 தானியங்கி சானிட்டரி எந்திரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, உதவி கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வங்கியின் திருவண்ணாமலை நகர கிளை மேலாளர்கள், வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள், மற்றும் காவலர்கள் , வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.