/* */

மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சுற்றிலும் மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது
X

பொக்லைன் இயந்திரம் மூலம்  ஆக்கிரமிப்புகள் அகற்றும் நகராட்சி அதிகாரிகள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலைச் சுற்றிலும் உள்ள மாட வீதியை முற்றிலுமாக சீரமைத்து கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தப்படும். மேலும், சாலையின் இருபுறமும் இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி, புதைவட மின் பாதையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, கோவிலில் துவங்கி மாட வீதி முழுவதும் சீரமைக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியது. அதற்காக கடந்த மாதம் சாலை அளவீடு உள்ளிட்ட ஆய்வு பணிகள் நடந்தன.

அதன் தொடர்ச்சியாக, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட துவங்கினர். மாடவீதியில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் கடந்த வாரமே தங்கள் கடைக்கு முன் உள்ள தகர கொட்டகைகள் மற்றும் கை வண்டிகளை அகற்றினர்.

கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

Updated On: 23 July 2021 7:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்