Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
HIGHLIGHTS
திருவண்ணாமலையில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொருளாளர் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மற்றும் பணியாளர்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர் பதவி உயர்வு நீங்களாக பணியாளர்களின் பதவி உயர்வை நிர்வாகம் வழங்கி வருவதை துணைப்பதிவாளர் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ,உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.