வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் திருடிய பணத்தை போலீஸ் மீட்பு
திருவண்ணாமலையில் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் திருடிய பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை சமுத்திரம் தண்டராம்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷபியுல்லா . இவர் மெடிக்கல் டிபார்ட்மென்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி இணையதள லிங்க் ஒன்று வந்துள்ளது. இந்த லிங்கை பயன்படுத்தி அப்டேட் செய்து ஓ.டி.பி. பகிர்ந்து உள்ளார்.
இதையடுத்து அவரது செல்போன் எண் இணைப்பில் இருந்த வங்கிக்கணக்கில் இருந்து .6 லட்சத்து 95 ஆயிரத்து 788 ரூபாயை மர்ம நபர்கள் திருடிவிட்டனர்.
இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த முகமது ஷபியுல்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பவன்குமாரிடம் புகார் மனு அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் சைபர் கிரைம் போலீசார் பாதிக்கப்பட்ட முகமது சபியுல்லா வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 5 ,45,788. ரூபாயை மீட்டு மீண்டும் முகமது சபியுல்லா வங்கிக்கணக்கில் வரவு வைத்தனர்.
அதற்கான காசோலையை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், முகமது சபியுல்லாவிடம் வழங்கினார்.
துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாரதி, தலைமையிலான குழுவினரை மாவட்ட கண்காணிப்பாளர் பவன்குமார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.