/* */

திருவண்ணாமலை அரசு பள்ளியில் 1500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

School Tree Plantation -திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அரசு பள்ளியில் 1500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
X

தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,500 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

School Tree Plantation -திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 1,500 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கடேசன், பள்ளி செயலாளர் ஜான்வில்லிங்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் அருகில் 1500 பனை விதைகளை திருவண்ணாமலை நகர கழக செயலாளர், வெற்றி தமிழர் பேரவை தலைவர் கார்த்திக் வேல்மாறன், கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, தமிழ்நாட்டின் சின்னமான பனைமரம், தமிழகத்தில் பழம்பெரும் மரங்களில் ஒன்றான பனைமரம், எண்ணிக்கைகள் தற்போது குறைந்து வருகிறது. தற்போது இது போன்ற பள்ளி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் பனை மரங்களை நடுதல் மூலம் நாம் பாரம்பரியத்தை பின்பற்றுவோம்.

மேலும் அதிக அளவில் பனை விதைகளை நட்டு பேணி காப்போம் என கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், தூய்மை அருணை காவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அருணை சேவை மையம் தலைவர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Sep 2022 10:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...