திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி
திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கலெக்டரின் இந்த புதிய உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் கோவில் வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பதற்கான சான்றுகளை கோவில் ஊழியர்கள் கேட்டு வருகின்றனர்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே இன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தாத பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.