Begin typing your search above and press return to search.
சிறுபான்மை இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலையில் பயிலும் சிறுபான்மை இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, ஜெயின் மதங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தியில், மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, ஜெயின் மதங்களை சேர்ந்த மாணவ மாணவிகளிடம் இருந்து 21-22 ஆம் கல்வியாண்டுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.