/* */

அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?

Cute things in the bath- தினமும் குளிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம் மட்டுமல்ல, அதில் பல சூட்சும விஷயங்களும் ஒளிந்திருக்கின்றன. அதுபற்றித் தெரிந்துக் கொள்வோம்.

HIGHLIGHTS

அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
X

Cute things in the bath- குளியலில் ஒளிந்திருக்கும் சூட்சும விஷயங்கள் ( மாதிரி படம்)

Cute things in the bath- குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்க வேண்டும். கர்மம் செய்த பின்னும் மயானத்துக்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்.

தினமும் கங்கா ஸ்தானம் செய்ய முடியும். ஒரு குவளை தண்ணீரில் மோதிர விரலால் ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு குளித்தால் உள் பூஜையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.


அக்னி எப்போதும் மேல் நோக்கியே பயணிக்கும் உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவது தான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றி கொள்ள வேண்டும். நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலில் இருந்து பரவும் குளிர்ச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள்அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும் அதுவே சரியான முறை.

தலை முதல் கால் வரை உள்ள பின்பாகத்தை பிரஷ்டம் என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது அங்குதான் அக்கினியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால் குளித்து முடித்தவுடன் முதலில் முதுகு பாகத்தை தான் துவட்ட வேண்டும்.

குளிக்கும் நீரிலே டவலை நனைத்துப் பிழிந்து துவட்டுவதுதான் உத்தமம் . அநேகமாக அனைவரும் ஈரம் படாத துண்டை தான் உபயோகிப்பார்கள். உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச் செய்து பல வித உள்நோவுகளை உருவாக்கும்.

பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம் அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.


குளிப்பதினால் பஞ்ச இந்திரியங்களால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப்பெறுகிறது.

குளிக்கும்போது வாயில் கொள்ளளவு நீரை வைத்து கொடுத்த பின் துப்புவதால் கண்டத்துக்கு மேல் கழுத்துக்கு வருகிற நீர் சம்பந்தமான நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல்நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்து விடும்.

நீர்நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும் பெரியவர்களும் அரூபமாக ஸ்தானம் செய்வதாக கூறுகிறார்கள்.


ஆதலால் ஓடி சென்று அதில் குதிக்காமல் கரையில் நின்று சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்த பின் நீர் கலங்காமல் ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்க வேண்டும். நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.

உப்பு நீர் ஸ்தானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும் மேற்குறிப்பிட்டு அனைத்தும் குளிக்கும் போது நாம் பயன்படுத்தக்கூடிய நல்ல முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 April 2024 8:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!