Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணி வரன்முறை பாதுகாத்திட வேண்டும். 12 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், பெண்கள் மகப்பேறு விடுப்பை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.