/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேம்பாலப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை நெடுஞ்சாலை துறை தலைமைப் பொறியாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில்  மேம்பாலப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
X

மாதிரி படம் 

திருவண்ணாமலை - வேலூர் சாலையில் கலசபாக்கம் செய்யாற்றின் குறுக்கிலும், கமண்டல நாகநதியின் குறுக்கிலும் கூடுதலாக மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை - வேலூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. அதனால், விபத்துகளும் அதிகரித்துள்ளன. எனவே, இந்த சாலையை விரிவாக்கம் செய்தல், தரம் உயர்த்துதல், விபத்து நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், கலசபாக்கத்தில் செய்யாற்றின் குறுக்கே அமைந்துள்ள மேம்பாலத்துக்கு அருகே கூடுதலாக புதிய மேம்பாலமும், சந்தவாசல் அருகே கமண்டல நாகநதியின் குறுக்கே ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மேம்பாலத்துக்கு அருகே, கூடுதலாக புதிய மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. மேலும், திருவண்ணாமலை -வேலூர் நெடுஞ்சாலையில் போளூர் அருகே ஆரணி சாலை பிரியும் இடத்தில் அமைந்துள்ள எட்டிவாடி ரயில்வே கேட் பகுதியில், மேம்பாலம் அமைக்கப்பட உள்ளன. அதற்கான நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் என்.பாலமுருகன், செய்யாறு, கமண்டல நாகநதி ஆகிய இடங்களில் ஆறுகளின் குறுக்கே மேம்பாலம் அமைத்தல் மற்றும் எட்டிவாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்தல் ஆகிய பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், திருவண்ணாமலை - வேலூர் சாலையில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள வாழியூர் சாலை சந்திப்பு, வசூர் சாலை சந்திப்பு, தென்பள்ளிப்பட்டு சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை தீபம் நகரில் அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பாலம், புறவழிச்சாலையில் திண்டிவனம் சாலை சந்திப்பில் நடைபெறும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தார். அதோடு, வேட்டவலம் சாலையில் ஏந்தல் அருகே புதியதாக உயர்மட்ட மேம்பாலம் அமையும் இடத்தை பார்வையிட்டார். தொடர் மழையால் தேசிய நெடுஞ்சாலைகளில் மழை வெள்ளம் வழிந்தோடும் இடங்களை பார்வையிட்ட தலைமை பொறியாளர், அந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சாலை சேதங்களை உடனடியாக சீரமைக்கவும் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, கண்காணிப்புப் பொறியாளர் (சென்னை) எம்.பன்னீர்செல்வம், கோட்டப் பொறியாளர் கே.பழனிச்சாமி, கோட்டப் பொறியாளர்(தரக்கட்டுப்பாடு) பி.இளங்கோ, உதவிக் கோட்டப் பொறியாளர் ஜி.மஞ்சுளா மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 2 Dec 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?