/* */

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம்

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம், இந்த சட்டதிருத்தம் மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம்
X

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளது... அதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. குறிப்பாக கோவில்கள் மற்றும் பள்ளிகள் அருகே டாஸ்மாக் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பான எத்தனையோ போராட்டங்களை பெண்களே முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக பல டாஸ்மாக்குகளை அரசே இழுத்து மூடியுள்ளது.

தவிர்க்க முடியாத பட்சத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக சொல்லப்படும் டாஸ்மாக்குகளை ஊருக்கு வெளியே ஒதுப்புறமாக இடம்மாற்ற செய்தும் உத்தரவிட்டது. காரணம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது என்பது தான் அரசின் கொள்கையாக உள்ளது.

எனினும் சில இடங்களில் இவைகளை செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது. மக்கள் போராட்டம் நடத்திய பிறகு, சில நாட்கள் பரிசீலிப்பிற்காக அத்தகைய டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன. மறுபடியும் அதே இடத்தில் கடைகள் திறக்கப்பட்டு விடுகின்றன. எனவே, டாஸ்மாக் மாதுபானக் கடைகளை அமைக்கும்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், அதன் சட்டவிதியில் தமிழ்நாடு அரசு தற்போது திருத்தம் செய்துள்ளது.

அதன்படி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அவர்களிள் ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்பட்டு அதன்பிறகே, டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும்.. மக்களின் மாற்று கருத்துகளை பரிசீலிக்காமல் எந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது. இதனை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்யவேண்டும். மக்கள் எதிர்ப்பை மீறி கடைகள் திறக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் கலெக்டர் முடிவை எதிர்த்து மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும் அரசு அந்த சட்டத்திருத்தத்தில் தெரிவித்துள்ளது.

குடியிருப்பு பகுதிகள், பள்ளி கல்லூரி பகுதிகள், பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், வழிபாட்டு பகுதிகள், மாணவர்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இப்போது கொண்டு வந்துள்ள இந்த சட்டதிருத்தம் மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 4 March 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...