Begin typing your search above and press return to search.
காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம்.
அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நடத்திய காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம்
HIGHLIGHTS
திருவண்ணாமலை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பெண் காவலர்கள் தங்கும் இடத்தில், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாமை, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தொடங்கி வைத்தார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜகாலிஸ்வரன் அவர்கள், அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் Dr.D.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் கண்காணிப்பாளர் Dr.P.குப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.