Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் முதல் கட்ட மாதிரி வாக்குப்பதிவு
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு தேர்தல் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டு தேர்தல் பிரிவு அதிகாரிகள் முதல் கட்ட சோதனையில் ஈடுபட்டனர்.
32 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டது. நகராட்சி ஆணையர், அரசியல் கட்சி பிரதிநிதிகள முன்னிலையில் நகராட்சி அதிகாரிகள், தேர்தல் பிரிவு அலுவலர்கள், நகராட்சி கணினி பிரிவு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.