/* */

நகை கடன் தள்ளுபடி செய்யக்கோரி மஞ்சள் தாலிக் கயிறுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நகைக் கடன் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நகை கடன் தள்ளுபடி செய்யக்கோரி மஞ்சள் தாலிக் கயிறுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

நகைக்கடன் தள்ளுபடி செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் இரும்பு கேட்டில் தாலிக்கயிறை கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று கையில் மஞ்சள் தாலி கயிறுடன் நின்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் நுழைவு வாயில் இரும்புக்கேட்டில் தாலி கயிறை கட்டினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விவசாயிகள் லாபகரமான விலை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். 2016-ல் விவசாயிகளின் நகைக்கடனில் ரூ.1 லட்சம் தள்ளுபடி செய்து மீதமுள்ள அசல் வட்டியை செலுத்தி நகையை மீட்டு கொண்டோம்.

எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி 2016-ம் ஆண்டை போன்று நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், என்றார்.

பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.

Updated On: 21 May 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!