/* */

திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 144 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தலில் 271 பேர் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு வாக்கு எண்ணும் மையம் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் பள்ளியில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளதையும் பார்வையிட்டார். தொடர்ந்து திருவண்ணாமலை அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆரணி

ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 65 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன் வாக்கு எண்ணும் மையத்தினையும், நகரில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய கவர், சீல் முத்திரை, மை, பேனா உள்ளிட்ட பொருட்களை ஒருகிணைக்கும்பணி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. அதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆரணி நகராட்சி தேர்தல் பார்வையாளர் முருகன், நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலரான பி. தமிழ்ச்செல்வி, அலுவலக மேலாளர் நெடுமாறன், வருவாய் ஆய்வாளர் மோகன், தேர்தல் பிரிவு அலுவலர் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

செங்கம்

செங்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் கண்காணிப்பாளரும், கோட்டாட்சியருமான வெற்றிவேல் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், வட்டாட்சியர் முனுசாமி, தேர்தல் அலுவலர்கள் உமாமகேஸ்வரி, உஷ்ணாபீ, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், செங்கம் பேரூராட்சி தலைமை எழுத்தர் வினோபா உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 16 Feb 2022 1:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...