Begin typing your search above and press return to search.
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி மநீம ஆர்ப்பாட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கோரி, மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகள், மக்கள் மீது அக்கறை கொண்டு உடனடியாக விலையை குறைக்க வேண்டும் என கூறி முழக்கங்கள் எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.