Begin typing your search above and press return to search.
மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி முகாமில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி முகாமில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 38,317 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக நார்த்தாம்பூண்டி கிராமத்தில் இன்று நடந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.