/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா: துணை சபாநாயகர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா: துணை சபாநாயகர்  பங்கேற்பு
X

கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஞானஜோதி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

பெரியார் சிலை அருகே உள்ள ஏ எல் சி தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அவர்கள் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவில் கார்மேல் சர்ச் போதகர் சாமுவேல் அவர்களிடம் இனிப்புடன் கூடிய சாக்லேட் மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், தொமுச அமைப்பாளர் ஆறுமுகம், திமுக சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

ஆரணி பழைய ஆற்றுப்பாலம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

அதிகாலை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. கேக்குகள் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். தேவாலயத்தில் இயேசு பிறப்பு குறித்த குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் நள்ளிரவு பங்குதந்தை விக்டர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

வேட்டவலம் புனித இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Updated On: 25 Dec 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!