Begin typing your search above and press return to search.
தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
தீபாவளிச்சீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை, செங்கம் சாலையை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், அடி அண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் அடி அண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டாக மாதம் ரூபாய் 800 வீதம் செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக செந்தில்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை, செல்போன் மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரைக் கண்டுபிடித்து, நாங்கள் செலுத்திய தீபாவளி சீட்டு, மாத சீட்டுத்தொகை என, பல லட்சம் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.