/* */

நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்.

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் படிப்பினை தொடர முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் படிப்பினை தொடர முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது ஒரு ஆண்டில் ஒருமுறை மட்டும் தலா ரூ.50 ஆயிரம் வழங்க அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அரசின் முகமையினால் நடத்தப்படும் ஒற்றைச்சாளர முறை வழியாக சேர்க்கை பெற வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் நிதியுதவி தொகை பெற இயலாது.

தமிழ்நாட்டில் இருப்பிட சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முதல் பட்டதாரி சலுகை பெற்றிருப்பினும் தொழிற்கல்வி பயில இயலாத மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு தொழில் கல்வி உதவித்தொகை வழங்க மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து சிறப்பினமாக கருதக்கோரும் கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறையால் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும். ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் உதவித்தொகை சென்று சேரும் வகையில் மக்கள் குறை தீர்க்கும் நாள், மக்கள் தொடர்பு முகாம்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான நிரந்தர சான்று, குடும்ப தலைவரின் ஆண்டு வருமான சான்று, குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வி தகுதி மற்றும் வருமான சான்று, ஒற்றைச்சாளர முறை வழியாக சேர்க்கை பெற்றதற்கான சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றை மக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் சம்பந்தப்பட்ட தனி தாசில்தார்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 April 2022 12:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய