திருவண்ணாமலையில் அரசு பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல்
திருவண்ணாமலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அரசு மேல் நிலை பள்ளிக்கு தேவையான இருக்கைகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தளவாடப் பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாணவர்களுக்கு தேவையான இருக்கைகள், அரசின் இலவச பாட புத்தகங்கள், ஆகியவற்றினை தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் வேல்மாறன் அவர்கள் வழங்கினார்கள். மேலும் அவர் பேசுகையில், தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மிகவும் பாரம்பரியமிக்க பள்ளி இப்பள்ளியில் இந்த ஆண்டு முதல் மாணவிகளுக்கு மட்டும் பிளஸ் 1 வகுப்பில் நர்சிங் குரூப் தொடங்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.