/* */

இந்திய அரசு எங்களை விரைந்து மீட்க வேண்டும்: வைரலாகும் தமிழக மாணவர்களின் வீடியோ

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் உக்ரைனில் சிக்கி தவிக்கின்றனர்.

HIGHLIGHTS

இந்திய அரசு எங்களை விரைந்து மீட்க வேண்டும்: வைரலாகும் தமிழக மாணவர்களின் வீடியோ
X

உக்ரைனில் சிக்கி தவிக்கும் திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கெஜலட்சுமி நகர் அப்பாவு முதலி தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் செல்வ மணிகண்டன். உக்ரைனில் உள்ள கார்கீவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறார். ரஷியா உக்ரைன் இடையே போர் நடப்பதால், உக்ரைனிலிருந்து தங்களை மீட்கக்கோரி செல்வ மணிகண்டன் மற்றும் அவருடன் பயிலும் தமிழக மாணவர்கள் சிலர் வீடியோ பதிவு மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 5000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கி தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும் வகையில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மாநில தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு அருகில் உள்ள தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு அவர்களின் விவரத்தை தெரிவிக்கலாம். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் தொலைபேசி எண்:94450 08158,

மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1070, ஆயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக ஆணையர் ஜெசிந்தா லாசரஸ்: 94458 69848, 96000 23645, 99402 56444, 044-28515288, புதுடெல்லியில் தமிழ்நாட்டு பொதிகை இல்லம் உக்ரைன் அவசர உதவி மைய வாட்ஸ்அப் எண்: 92895 16716, மின்னஞ்சல் முகவரி:- ukrainetamils@gmail.com ஆகியவற்றை பயன்படுத்தி தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் தொழில்முறை கல்வி படிப்பது போன்றவற்றிற்காக உக்ரைனில் உள்ளதாக தகவல்கள் வந்து உள்ளது. அவர்களின் விவரங்கள் சென்னைக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Updated On: 26 Feb 2022 2:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி