Begin typing your search above and press return to search.
போளூர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள்
போளூர் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மருத்துவ வட்டத்தில் நாளை ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்களின் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, திருச்சூர் பேட்டை, கேளூர், வாழியூர், சந்தவாசல், காலா சமுத்திரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 32 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.