/* */

வேட்டவலம் புறவழிச்சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு

வேட்டவலம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

வேட்டவலம் புறவழிச்சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு
X

வேட்டவலம் புறவழிச்சாலை அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம்

வேட்டவலம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்து அப்பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்தநிலையில் கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏவான பிச்சாண்டி , வேட்டவலத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும், என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, வேட்டவலம் புறவழிச்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அதற்குண்டான பணிகள் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புறவழிச்சாலை சாலை அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வேட்டவலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகார்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் புறவழிச்சாலை அமைப்பது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் உடனடியாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Oct 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு