/* */

மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் சாவு

கீழ்பென்னாத்தூரில் எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால்  எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் சாவு
X

பைல் படம்.

கீழ்பென்னாத்தூர் அருகே கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, விவசாயி. இவரது மகள் நளினி (வயது 23). இவருக்கு வரன் பார்த்து திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தாலும், தன்னைவிட அதிக வயது வித்தியாசத்தில் தனக்கு பொருத்தம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பார்கள் என நினைத்த நளினி வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனா். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 7 May 2022 1:27 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை