/* */

கலசப்பாக்கம் பகுதியில் கரும்புசாறு விற்கும் தம்பதியினர் கொரோனா நிவாரண நிதி வழங்கினர்

கலசப்பாக்கம் பகுதியில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்கள்.

HIGHLIGHTS

கலசப்பாக்கம் பகுதியில் கரும்புசாறு விற்கும் தம்பதியினர் கொரோனா நிவாரண நிதி வழங்கினர்
X

கலசப்பாக்கம் பகுதியில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்கள். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிகளில் கோவிட் 19 சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் ஆய்வு செய்தார்கள். உடன் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு சரவணன் மற்றும் மருத்துவர்கள் அதிகாரிகள் இருந்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், தடுப்பூசியின் அவசியத்தை பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அதன் சிறப்பைப் பற்றி உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, கலசபாக்கம் தாலுக்கா எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த நெடுஞ்சாலையில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் ரமேஷ் மற்றும் ரஞ்சனி தம்பதியினர் தங்களது தினசரி வருமானத்திலிருந்து ரூபாய் 5000, கொரோனா பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். அவர்களை ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்

Updated On: 5 Jun 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...