கலசபாக்கம் அருகே காளை விடும் திருவிழாவில் கோஷ்டி மோதல்

கலசபாக்கம் அருகே நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் கோஷ்டி மோதல்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலசபாக்கம் அருகே  காளை விடும்  திருவிழாவில் கோஷ்டி மோதல்
X

கோஷ்டி மோதல்

கலசபாக்கம் அருகே நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், மேல்சோழங்குப்பம், பட்டியந்தல், வீரளூர், கடலாடி, கீழ் பாலூர் உள்பட பல்வேறு கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக காளை விடும் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு காளை விடும் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றன.

இது சம்பந்தமாக கடலாடி போலீசார் கட்டுப்பாடுகளை மீறி காளை விடும் திருவிழா நடத்திய விழா குழுவினர் 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மாட்டு பொங்கலை முன்னிட்டு ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழா தொடங்கிய சிறிது நேரத்திலேயே இருதரப்பினரை சேர்ந்த இளைஞர்களிடையே கோஷ்டி மோதல் உருவானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். பின்பு அருகிலிருந்த ஓட்டு வீடுகளும் சூறையாடப்பட்டன. இதையடுத்து அங்கிருந்த போலீசார் விழாவை பாதியில் நிறுத்திவிட்டு கூட்டத்தை கலைத்தனர். பின்பு அங்கு ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு, இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி நேரில் சென்று விசாரணை நடத்தினார். இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 16 Jan 2022 1:27 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  4. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  5. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  6. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  7. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  8. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  9. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  10. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?