/* */

செய்யாறில் ரேஷன் பொருள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

செய்யாறில் ரேஷன் பொருள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

HIGHLIGHTS

செய்யாறில் ரேஷன் பொருள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
X

செய்யாறில் ரேஷன் பொருள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் காந்தி சாலையில் கற்பகம் கூட்டுறவு அங்காடியின் 2 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் கடை எண்:1-ல் விற்பனையாளராக பாலகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் போதையில் பணிக்கு வருவதாகவும், கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இன்று வழக்கம்போல் ரேஷன் பொருள் வாங்க பொதுமக்கள் கடைக்கு சென்றபோது விற்பனையாளர் பாலகிருஷ்ணன் குடிபோதையில் இருந்ததாகவும், பொதுமக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விற்பனையாளரை கண்டித்து திடீரென ரேஷன் கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மேலாளர் கணேசன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விற்பனையாளர் பாலகிருஷ்ணன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து கடை எண்:2 விற்பனையாளர் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Updated On: 12 Oct 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்