/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணி வகுப்பு

தேர்தல் பாதுகாப்பு பணியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலையொட்டி  போலீசாரின் கொடி அணி வகுப்பு
X

ஆரணியில் நடைபெற்ற கொடி அணி வகுப்பு ஊர்வலம்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை, கலவரங்கள், சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், காவல் துறை எந்த நேரமும் விழிப்புடன் செயல்படும் என்பதை வெளிப்படுத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, போளூா், ஆரணியில், வருகிற மக்களவைத் தேர்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

செய்யாற்றில் டிஎஸ்பி சின்னராஜ் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா்கள் ஜீவராஜ் மணிகண்டன், லதா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் சேகா், உதவி ஆய்வாளா்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.

போளூா்

போளூரில் டிஎஸ்பி நல்லு தலைமையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கொடி அணிவகுப்பு சனிக்கவாடி சாலை, திருவண்ணாமலை சாலை, தீயணைப்பு நிலைய சாலை, அப்துல் குத்தூஸ் தெரு, பழைய பஜாா் சாலை, ஜமுனாமரத்தூா் சாலை, புதிய பேருந்து நிலையம், அண்ணா சாலை என நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில், போளூா் உள்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் ஆய்வாளா்கள் ஹேமாவதி (போளூா்), கருணாகரன்(கலசப்பாக்கம்) மற்றும் கடலாடி, ஜமுனாமரத்தூா், சேத்துப்பட்டு காவல் நிலையங்களில் இருந்து போலீஸாா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி மக்களவைத் தொகுதி சாா்பில் கிராமிய போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஆரணி -சேவூா் நான்கு முனை புறவழிச் சாலையில் இருந்து சேவூா் பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது. டிஎஸ்பி ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். காவல் ஆய்வாளா்கள் ராஜாங்கம், விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் அருண்குமாா், சுந்தரேசன் மற்றும் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 31 March 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  2. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  3. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  4. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  8. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  9. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...