/* */

திருவண்ணாமலை குவாரி தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து உரிமையாளர்களுடன் ஆலோசனை

செய்யாறு சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை

HIGHLIGHTS

திருவண்ணாமலை குவாரி தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து உரிமையாளர்களுடன் ஆலோசனை
X

திருவண்ணாமலை மாவட்ட சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களுடன் தூசி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் தலைமையில் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்தை ஒழிப்பது குறித்தும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி குவாரிகளை நடத்த வேண்டும் என்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்.

மேலும் தூசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்துள் ளதால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குவாரி வாகனங்கள் காலை 08 மணி முதல் 09 மணி வரையிலும் மாலை 04.30 மணி முதல் 06 மணி வரையிலும் செல்லக் கூடாது என்றும் , லாரிகளில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என்றும் தொழிற்சாலைகளில் வேலை கொடுக்க வேண்டும் என்றும் மாமுல் கொடுக்க வேண்டும் என்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் குறித்து உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கல்குவாரியினர் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் தூசி காவல் நிலையத்தில் மரக்கன்றை நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் உடனிருந்தார்.

Updated On: 14 March 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை