/* */

செய்யாறு அருகே கோவில் பூட்டை உடைத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை திருட்டு

செய்யாறு அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே கோவில் பூட்டை உடைத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை திருட்டு
X

கோயிலில் செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

செய்யாறு தாலுகா அத்தி கிராமத்தில் சுப்பிரமணியர் கோவிலும் உட்பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணியர் கோவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஆஞ்சநேயர் சன்னதியின் பூட்டை உடைத்து சுமார் இரண்டரை அடி உயரத்தில் நிறுவப்பட்டிருந்த ஐம்பொன்னாலான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை திருடி சென்றுள்ளனர். 30 கிலோ எடை கொண்ட சிலையின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் நள்ளிரவில் கோவிலின் சுற்று சுவர் மீது ஏறி உள்ளே குதித்த மர்ம நபர்கள் சிலையை பெயர்த்து எடுத்து கோவிலின் வெளியே போட்டுவிட்டு மீண்டும் சுவர் ஏறி வெளியே குதித்து சிலையை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Aug 2022 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...