Begin typing your search above and press return to search.
செய்யாறில் சமுதாய வளைகாப்பு விழா
செய்யாறில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியங்கள் , செய்யாறு நகராட்சி சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளா வரவேற்றார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, பங்கேற்று 150 கர்ப்பிணிகளுக்கு தலா ரூபாய் 400 மதிப்பிலான புடவை, வளையல் உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசையாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வாழ்வில் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கந்தன், ஒன்றிய குழு தலைவர்கள், செய்யாறு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.