/* */

தொடர் மழை காரணமாக செய்யாறு பகுதியில் வீடுகள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் தொடர் மழையினால் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. ஒரு கர்ப்பிணிப் பெண் காயமடைந்தார்.

HIGHLIGHTS

தொடர் மழை காரணமாக செய்யாறு பகுதியில் வீடுகள் சேதம்
X

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் செய்யாறு எம்எல்ஏ ஜோதி

செய்யாறு வெம்பாக்கம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பல வீடுகள் இடிந்தன.

இந்நிலையில் செய்யாறு அருகே உள்ள மகாஜனம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகத்தின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் ஆறுமுகத்தின் மனைவி மற்றும் கர்ப்பிணி மகள் , இரண்டு வயது குழந்தை என நான்கு பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர் . அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். காயமடைந்த கர்ப்பிணி பெண் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தகவலறிந்த செய்யாறு எம்எல்ஏ ஜோதி நேரில் சென்று பாதிக்கப்பட்ட ஆறுமுகம் குடும்பத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி மருத்துவ செலவிற்கு ரூபாய் இரண்டாயிரம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார் . மேலும் தொகுப்பு வீடு வழங்க பரிந்துரை செய்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர்கள் , வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 17 Nov 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?