/* */

பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசுக்கு எஸ்பிஐ வங்கி துணை போகிறது காங்கிரஸ் கட்சியினர் கட்டணம்

HIGHLIGHTS

பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்!
X

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

மத்திய அரசுக்கு பாரத ஸ்டேட் வங்கி துணை போவதா? - காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரிய மத்திய அரசுக்கு பாரத ஸ்டேட் வங்கி துணை போவதாகக் கூறி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பென்னாத்தூர்:

பாரத ஸ்டேட் வங்கி எதிரே, வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன் குமார் தலைமை வகித்தார்.

வட்டாரத் தலைவர் கோபாலகிருஷ்ணன், நகரத் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் கராத்தே ராஜா, நகரப் பொருளாளர் இளையராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நகரத் தலைவர் ராஜாமணி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்யாறு:

பாரத ஸ்டேட் வங்கி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவர் சந்துரு தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டத் தலைவர் பிரசாந்த் கலந்து கொண்டார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழல் செய்துள்ள, பாஜகவின் ஊழலுக்கு ஆதரவாக பத்திர தடயங்களை மறைக்க முயலுவதாக பாரத ஸ்டேட் வங்கியைக் கண்டித்து உரையாற்றினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் தில்லை, மாவட்ட சேவா தளம் சகாதேவன், மாவட்ட துணைத் தலைவர் ராஜவேலு, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், வட்டாரத் தலைவர்கள் அமரேசன், சிங்காரவேலு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி:

டவுன் எஸ்பிஐ வங்கி எதிரில் காங்கிரஸ் நகர தலைவர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மணி, சோலை முருகன், இளங்கோ, வட்டாரத் தலைவர்கள் சேகர், குப்புசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட தலைவர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், நகர தலைவர் பழனி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கண்டன அறிக்கை:

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

இது பாஜகவின் ஊழல்களை மறைக்க பாரத ஸ்டேட் வங்கி துணை போவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவில் கறுப்பு பணம் பாஜகவுக்கு வந்ததாகவும், இதை மறைக்கவே பாரத ஸ்டேட் வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறினர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.

தொடர்ந்து போராட்டம்:

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட மத்திய அரசு மறுத்தால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 March 2024 7:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  2. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  3. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  4. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  8. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  10. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...