/* */

செய்யாறு அருகே மரத்தில் கார் மோதி விவசாயி பலி

செய்யாறு அருகே டயர் வெடித்ததால், கார் மரத்தில் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே மரத்தில் கார் மோதி விவசாயி பலி
X

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா குத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபாலன். இவர் தனது உறவினர்களுடன் நாவல் பாக்கம் கிராமத்தில் நடந்த உறவினரின் நிச்சயத்தார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு காரில் சென்றுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் காரில் புறப்பட்டு கூத்தனூர் கிராமத்துக்கு திரும்பி சென்றபோது, திடீரென காரின் டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சாலை ஓரம் இருந்த ஒரு புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராஜகோபாலன் மற்றும் உறவினர்கள் குமார் (வயது 40), விவசாயி. பூபாலன் (38), உமாமகேஸ்வரி (33), நாகபூஷனம் (62) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

எனினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செய்யாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 12 Dec 2021 7:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா