Begin typing your search above and press return to search.
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 17 பேர் காயம்
செய்யாறு அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஊரக வேலை திட்ட பணியாளர்கள் 17 பேர் காயமடைந்தனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிலர் ஊரக வேலை திட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆற்காடு செய்யாறு சாலையில் அரசு பாலிடெக்னிக் அருகே சென்றபோது ஷேர் ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு ஆண்கள் 15 பெண்கள் என 17 பேர் காயமடைந்தனர் இவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பணியாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தி உரிய சிகிச்சை அளிக்கவும் பரிசோதனைக்கான மருத்துவ கட்டணத்தை செலுத்துவதாகவும் அவர் அறிவித்தார்.