/* */

ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம்

தண்டராம்பட்டு அருகே பெருங்குளத்தூர் ஊராட்சியில் ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம்

HIGHLIGHTS

ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம்
X

ஏரியில் ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அகற்றப்பட்டது

தண்டராம்பட்டு அருகே பெருங்குளத்தூர் ஊராட்சியில் 216 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிலத்தை ஆக்கிரமித்து நெல், கரும்பு, மரவள்ளி பயிரிடப்பட்டு இருந்தது.

இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் ஏரி முழுவதும் நிரம்பாததோடு பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பாதிப்பு உருவானது. இதனையடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற அரசு உத்தரவிடப்பட்டது.

அதன்படி பெருங்குளத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். உதவி பொறியாளர் அறிவழகன், சர்வேயர் உமாநாத், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதியை அளவீடு செய்தனர்.

அப்போது ஏரிக்கு சொந்தமான 30 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, மரவள்ளி ஆகியவை பயிரிடப்பட்டு இருந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஏரிப் பகுதியில் ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அகற்றப்பட்டது.

Updated On: 5 Dec 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!