/* */

செங்கம் அருகே சவக்குழியில் படுத்த விவசாயி- தொடரும் நூதன போராட்டம்

மாவட்ட ஆட்சியர், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்யக்கோரி நூதன முறையில் சுடுகாட்டில் போராட்டம் நடத்திய விவசாயியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

HIGHLIGHTS

செங்கம் அருகே சவக்குழியில் படுத்த விவசாயி- தொடரும் நூதன போராட்டம்
X

செங்கம் காவல்துறையினர்,  விவசாயிடம் சமரசம் பேசி கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனக்கூறி, சவக்குழியில் இருந்து எழுப்பி அழைத்து சென்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுடுகாட்டில் விவசாயி ராமஜெயம் என்பவர் சாமானிய மக்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் செங்கம் வட்ட அரசு ஊழியர்களை கண்டித்து தனக்கு தானே சவக்குழி தோண்டி. உயிருடன் சவக்குழியில் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

செங்கம் பகுதியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வனத்துறை, வருவாய் துறை என விவசாயிகள் தேடிச் செல்லும் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு அறிவிக்கப்பட்ட சலுகைகளை சாதாரண விவசாயிகளுக்கு அரசு அதிகாரிகள் செய்யாமல், எதிராக செயல்படுவதாகவும் இது குறித்து மாதாந்திரம் நடக்கும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் விவசாயி மனமுடைந்தார்.

ஏற்கனவே, ஆணி கட்டிய செருப்பை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று போராட்டம், தீ மிதித்து சத்தியம் செய்யும் போராட்டம் போன்ற பல போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் தற்பொழுது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செங்கம் அரசு அலுவலகத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளின் குறைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சாதாரண விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் விவசாயி ராமஜெயம் சவக் குழியில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் விவசாயிடம் சமரசம் பேசி கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என கூறி சவக்குழியில் இருந்து எழுப்பி அழைத்து சென்றனர்

Updated On: 2 May 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்