/* */

நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை: மக்கள் அவதி

கைரேகை இயந்திரம் வேலை செய்யாததால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் வேதனை.

HIGHLIGHTS

நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை: மக்கள் அவதி
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா வாணாபுரம் தச்சம்பட்டு வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு நியாயவிலைக் கடைகள் உள்ளது. ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரேஷன் கடைக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு வருகிறோம்.

ரேஷன் கடைக்கு வந்த பிறகு விற்பனையாளர் கைவிரல் ரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியின் சர்வர் வேலை செய்யவில்லை எனக் கூறி திருப்பி அனுப்புகிறார். நாங்கள் தினமும் காலை 9 மணிக்கு வந்து மாலை வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம், தொடர்ந்து இதுபோல் கூறினால் நாங்கள் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே சர்வர் சரியாக வேலை செய்யவில்லை அத்தியாவசிய பொருட்களை வழங்க தயாராக இருந்தாலும் கருவியில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சர்வர் வேலை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம் என்றார்.

Updated On: 19 May 2022 6:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா